
மேலும் நிதியை வழங்குவதற்கு தீர்மானம்..
உலக வங்கியின் சர்வதேச அபிவிருந்தி பணியகம் இலங்கைக்கு மேலும் நிதியை வழங்குவதற்கு ஏற்றுக் கொண்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 60 மில்லியன் ரூபா பெறுமதியுடைய மூன்று திட்டங்களுக்கு இந்த நிதி வழங்கப்படவுள்ளது.
போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு இந்த நிதி வழங்கப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக இடைக்கால கடன் உதவியின் கீழ் 22.4 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.