
சர்ச்சை தீர்ப்பளித்த நீதிபதிக்கு 150 ஆணுறைகளை அனுப்பிய பெண்!
பாலியல் அத்துமீறல் தொடர்பாக சர்ச்சை தீர்ப்பளித்த, மஹாராஷ்டிர மாநிலம், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதிக்கு, குஜராத்தை சேர்ந்த பெண்ஒருவர் 150ஆணுறைகளை அனுப்பி, எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
'போக்சோ' எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ், ஒரு வழக்கில், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கணேதிவாலா, கடந்த மாதம் தீர்ப்பு அளித்தார்.
'தோலும் தோலும் தொடர்பு கொண்டால் மட்டுமே அது, பாலியல் அத்துமீறலாகும்' என, தீர்ப்பில் அவர் குறிப்பிட்டார்.
இளம் சிறுமியின் ஆடைகளை களையாமல், அவருடைய உடலை தொட்டதாக தொடரப்பட்ட வழக்கில், 39 வயதுடைய ஒருவரை விடுதலை செய்து, நீதிபதி புஷ்பா கணேதிவாலா தீர்ப்பு அளித்தார்.
இது நாடு முழுதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், பெண் நீதிபதிக்கு ஆணுறைகளை அனுப்பி வைத்து, குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர்தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்