
தடுப்பூசி ஏற்றிக்கொள்ள எம்.பிக்களுக்கு மேலதிக கால அவகாசம்
கொவிட் 19 தடுப்பூசியை செலுத்தத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதனை செலுத்திக்கொள்வதற்கான மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற படைக்கள சேவிதர் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 23, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் ஒக்ஸ்ட்போர்ட் அஸ்ட்ரா செனிகா கொவிசீல்ட் தடுப்பூசிகளை செலுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்