
முல்லைத்தீவில் மாணவனை தாக்கிய பாடசாலை அதிபர்
முல்லைத்தீவு- பாண்டியன் குளம் பகுதியிலுள்ள பாடசாலையில் அதிபர் மாணவன் ஒருவரை தாக்கியதாக நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று(23) முல்லைதீவு- துணுக்காய் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாண்டியன் குளம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம் குறித்த மாணவனை பெற்றோர்கள் முன்னிலையில் வைத்து அதிபர் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் நேற்று மாலை நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் பாடசாலை அதிபருக்கு எதிரான முறை பாட்டை பதிவு செய்துள்ளனர்.