கடலுக்குள் பாய்ந்த மோட்டார் சைக்கில்- குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலி!

கடலுக்குள் பாய்ந்த மோட்டார் சைக்கில்- குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலி!

பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிள் விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கில் கடலுக்குள் பாய்ந்ததாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிலில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கற்கோவலத்தைச் சேர்ந்த பவிதரன் வயது-30 என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்துள்ளார். இன்று காலை அந்த வீதியூடாகப் பயணித்தவர்கள் பருத்தித்துறை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.