
சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் குறித்து அறிவிப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்
பொது மக்கள் தங்கள் பிரதேசங்களில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் குறித்து அறிவிப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
சூழல் அழிப்புகள் தொடர்பில் அறிவிப்பதற்காக 1997 என்ற தொலைபேசி இலக்கம் நிறுவப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்லை 'அபே கம' வளாகத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டதன் பின் ஊடங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை, சூழலுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்துவதற்கு ஒத்துழைக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய வள பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த சங்கைக்குரிய எல்லே குணவங்ஷ தேரர் இதன்போது தெரிவித்துள்ளார்.