மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி; மூவர் காயம்
இந்தியாவில் மழை காரணமாக மரத்தின்கீழ் இருந்த நான்கு பேரை மின்னல் தாக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குறித்த இடத்திற்கு அருகில் இருந்த சிசிரீவியிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அத்துடன் இந்த சம்பவத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய மூவரும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்