குவைத்திலிருந்து 288 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைத்திலிருந்து 288 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான 288 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நேற்றிரவு அவர்கள் நாடு திரும்பியதாக, விமான நிலையத்திற்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாடு திரும்பியவர்களுள், பெருமளவானோர் பெண்களாவர் என்றும் அவர் குறிப்பிட்டார்