பெரும் சர்ச்சையை தோற்றுவித்த சூர்யகுமாரின் ஆட்டமிழப்பு!

பெரும் சர்ச்சையை தோற்றுவித்த சூர்யகுமாரின் ஆட்டமிழப்பு!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 ஆவது இருபதுக்கு 20 போட்டி, அஹமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்துகளின் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடங்களாக 57 ஓட்டங்களை எடுத்திருந்தார். எனினும், 31ஆவது பந்தை எதிர்கொண்ட அவர் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

ஆட்டமிழப்பு தொடர்பான மூன்றாவது நடுவரின் முடிவு கடும் சர்ச்சைக்குள்ளானது.

சாம் கர்ரன் வீசிய அந்த பந்தை, சூர்யகுமார் யாதவ் லாவகமாக பவுண்டரிநோக்கி விலாசினார். பந்து தரையை தொடும் நிலையில், டேவிட் மாலன் பாய்ந்து பந்தை பிடித்தார்.

கள நடுவர் அனந்த பத்மநாபன்,  யாதவ் ஆட்டமிழந்ததாக தீர்ப்பு வழங்கினார். எனினும், இதை உறுதி செய்வதற்கு மூன்றாவது நடுவர் வீரேந்திர சர்மாவுக்கு பரிந்துரை செய்தார்.

மூன்றாவது நடுவர் பல முறை ஸ்லோ-மோஷனில் ரீப்ளே செய்து பார்த்தார். முன்பகுதியை கூர்ந்து கவனித்தால், மாலனின் விரல்களுக்கு இடையில் பந்து தரையைத் தொடுவது தெளிவாக தெரிந்தது.

இருப்பினும், சரியாக புலப்படவில்லை என கள நடுவரின் முடிவையே மூன்றாவது நடுவர் கூற, சூர்யகுமார் யாதவ் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில், மூன்றாவது நடுவரின் முடிவை முன்னாள் வீரர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் விமர்சித்து, சமூக வலைத்தளங்களில் கண்டித்து வருகின்றனர்.

சூர்யகுமார் யாதவ் அவுட் இல்லை என்பது தெளிவாக தெரிகின்ற போதிலும். மூன்றாவது நடுவர்வழங்கிய முடிவு மோசமானது என பலரும் சமூகவலைத்தளங்களில் கடுத்துகளை பதிவிட்டு வருகின்றனர்