மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சகம் மீது சரமாரியான துப்பாக்கிச் சூடு! 13 பேர் பலி

மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சகம் மீது சரமாரியான துப்பாக்கிச் சூடு! 13 பேர் பலி

மெக்சிகோ நாட்டில் பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு வாகனம் ஒன்றின் மீது மர்ம கும்பல் ஒன்று திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

லானோ கிராண்ட் மாவட்டத்தின் கோட்டெபெக் ஹரினாஸ் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சகத்தின் 8 அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் இதுதவிர மெக்சிகோ மாநில வழக்கறிஞர் அலுவலக ஊழியர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர் எனவும் இவ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

மெக்சிகோ நாட்டில் போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் கும்பல் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றஅநிலையில். அவர்கள் தங்களுக்குள் மோதலில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் சுட்டு கொல்வதுடன், தங்களுக்கு எதிராக நடக்கும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளையும் விட்டு வைப்பதில்லை.

இதனை தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு படை, இராணுவம், கடற்படை மற்றும் நுண்ணறிவு பிரிவு ஆகியவை கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. எனினும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாரென இதுவரை தெரிய வரவில்லை எனவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.