
ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு வர்த்தமானிக்கு எதிரான மனு விசாரணை திகதி அறிவிப்பு!
தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்ய உத்தவொன்றை பிறப்பிக்குமாறு கோரி 20 பெருந்தோட்ட கம்பனிகளால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தலைவர் நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது, இந்த மனுவிலுள்ள விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக எதிர்வரும் 26 ஆம்திகதி இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் குழாம் அறிவித்தது.
20 பெருந்தோட்டக் கம்பனிகளால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் எதிர்மனுதாரர்களாக தொழில் உறவுகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தொழில் ஆணையாளர் நாயகம் ப்ரபாத் சந்திரகீர்த்தி, தேயிலை தொழில் தொடர்பான சம்பள நிர்ணய சபையின் தலைவர் உள்ளிட்ட 18 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்