
நாகதம்பிரான் ஆலயத்துக்கு வர வெளிமாவட்ட பக்தர்களுக்கு தடை
கிளிநொச்சி - புளியம்பொக்கனை - நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழாவிற்கு வெளிமாவட்டத்திலிருந்து செல்லும் பக்தர்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் கொவிட் 19 பரவல் அதிகரித்து வரும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த கண்டாவளை பிரதேச செயலகம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
ஆலய நிர்வாகத்தினருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் அது தொடர்பான இணக்கப்பாடுகள் ஏற்பட்டதாகவும் கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன் தெரிவித்துள்ளார்.
100க்கும் குறைவானவர்களின் பங்குபற்றுதல்களுடன் குறித்த பொங்கல் விழா இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.