
கொவிட்-19: பிரேஸிலில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 இலட்சத்தை கடந்தது.
அண்மைய உத்தியோகபூர்ப புள்ளிவிபரங்களின் படி, இதுவரை 15 இலட்சத்து 1,353பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும், கொடிய கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் 61 ஆயிரத்து 990பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேஸிலில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 47,984பேர் புதிதாக வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். 1,277பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர, 523,216பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 8,318பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இதுவரை 916,147பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.