
திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் ஒரே கட்டமாக 6-ந்தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. வாக்குப்பதிவு நாள் நெருங்குவதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பிரசாரமும் தீவிரமடைந்துள்ளது.
திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர் வீட்டுத் தனிமையில் உள்ளார்.