
பாகிஸ்தானில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே 22 பேர் பலி!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஆளில்லாத ரயில் பாதையை கடக்க முயன்ற போது பேருந்து ஒன்று ரயிலுடன் மோதுண்டுள்ளது.
குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்த சீக்கிய யாத்திரிகர்கள் 22 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீக்கியர்கள் சென்ற புனித யாத்திரையின் போதே இந்த அசம்பாவிதம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.