
உலக சுகாதார நாள்: ஏப்ரல் 7, 1950
உலகின் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக் கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும். இந்நிறுவனம் உலக பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது. இந்நிறுவனம் 1948-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கப்பட்டது. இதன் தலைமை
உலகின் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக் கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும். இந்நிறுவனம் உலக பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது.
இந்நிறுவனம் 1948-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது. இதன் முக்கிய வேலை திட்டம் தொற்றுநோய்கள் போன்ற நோய் நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் பொது சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும். அந்த அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 7-ம் தேதியை உலக சுகாதார தினமாக கொண்டாடுகின்றனர்.