வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத சீனா! அமெரிக்கா கடும் ஆவேசம்

வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத சீனா! அமெரிக்கா கடும் ஆவேசம்

அண்டை நாடுகளுடன் சீனா எப்போதும் விரோதம் பாராட்டி வருகிறது என்று அமெரிக்க எம்.பி. டாம் காட்டன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அமெரிக்க செனட் சபையின் மூத்த உறுப்பினர் டாம் காட்டன் கூறும்போது,

“சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அண்டை நாடுகளை மிரட்டி வருகிறது. தென் சீனக் கடல் பகுதி, வியட்னாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை மிரட்டி வருகிறது, அந்நாடுகளின் வளர்ச்சியைத் தடுத்து வருகிறது.

தாய்வான், ஜப்பான் வான்வெளியையும் சீனா ஆக்ரமித்து வருகிறது. ஹாங்காங்கில் அடக்குமுறை தொடர்ந்து வருகிறது.

ஆசியாவில் இந்தியா ஒரு பெரும் சக்தியாக வளர்ந்து வருவதை சீனா விரும்பவில்லை. தனக்குப் போட்டியாக இந்தியா வந்து விடும் என்றுதான் எல்லையில் சீனா பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோக்கமே அது எல்லையில் அத்துமீறக் காரணம்.

இந்தியாவின் நெருங்கிய நண்பன் அமெரிக்கா, எனவே இது தொடர்பாக இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்.

கொரோனா உலகம் முழுதும் பரவி வருவதையடுத்து இந்தக் காலக்கட்டத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா முயற்சி செய்கிறது” என்றார் டாம் காட்டன்