
டைட்டானிக் கப்பல் அண்டார்டிக் கடலில் பனிப்பாறையில் சிக்கி மூழ்கியது. இதில் பயணம் செய்த அனைவரும் இறந்தனர். இந்த கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி தனது பயணத்தை ஆரம்பித்தது.
டைட்டானிக் கப்பல் அண்டார்டிக் கடலில் பனிப்பாறையில் சிக்கி மூழ்கியது. இதில் பயணம் செய்த அனைவரும் இறந்தனர். இந்த கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி தனது பயணத்தை ஆரம்பித்தது.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1815 - இந்தோனேசியாவில் டம்போரா எரிமலை வெடித்து சிதறியதில் பல தீவுகள் அழிந்தன. 71,000 பேர் கொல்லப்பட்டனர்.
1821 - கொன்ஸ்டண்டீனோபோலின் ஆயர் ஐந்தாம் கிரெகோரி துருக்கியர்களினால் தூக்கிலிடப்பட்டார்.
1826 - துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற கிரேக்க நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர். இவர்களில் மிகச்சிலரே தப்பினர்.
1848 - இங்கிலாந்தில் கிரேட் யார்மூத் நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 250 பேர் கொல்லப்பட்டனர்.
1864 - முதலாம் மாக்சிமிலியன் மெக்சிக்கோவின் மன்னனாக முடி சூடினான்.
1868 - அபிசீனியாவில் அரோகீ என்ற இடத்தில் பிரித்தானிய மற்றும் இந்தியக் கூட்டுப்படைகள் தியோடர் மன்னனின் படைகளை வெற்றி கண்டன. 700 எதியோப்பியப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய/பிரித்தானியப் படையினரில் இருவர் மட்டுமே கொல்லப்பட்டனர்.
1869 - கியூபாவில் கியூபா புரட்சிக் கட்சி ஜொசே மார்ட்டீயினால் தொடங்கப்பட்டது.
1912 - டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது.