பாரிய அழிவில் இருந்து லண்டனை காப்பாற்றிய பொலிஸார்! பொறிக்குள் சிக்கிய தாக்குதல் குண்டுதாரி

பாரிய அழிவில் இருந்து லண்டனை காப்பாற்றிய பொலிஸார்! பொறிக்குள் சிக்கிய தாக்குதல் குண்டுதாரி

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதலைப் போன்று பிரித்தானியாவின் புனித போல் தேவாலயத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பெண் ஒருவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

புனித போல் தேவாலயத்திற்கும், லண்டனில் உள்ள சுரங்க தொடருந்து வர்த்தக சந்தைக்கும் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்துவதே தனது நோக்கமாகும் என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆகக் குறைந்தது 14 ஆண்டுகள் அவர் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

லண்டனில் பிறந்து இஸ்லாம் மதத்தை தழுவிய ஷாபியா ஷாய்க் என்ற 36 வயது பெண்ணுக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் வணக்கத்தை தெரிவித்து புன்னகையுடன் சிறைச்சாலை நோக்கி சென்றதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.