கொவிட்-19: ஆஸ்திரியாவில் ஐந்து நாட்களுக்கு பிறகு ஒருவர் உயிரிழப்பு

கொவிட்-19: ஆஸ்திரியாவில் ஐந்து நாட்களுக்கு பிறகு ஒருவர் உயிரிழப்பு

ஆஸ்திரியாவில் கடந்த ஐந்து நாட்களுக்கு பிறகு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாடுகள் ஆஸ்திரியாவில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அங்கு கொவிட்-19 உயிரிழப்பு வீதம் குறைந்து செல்கின்றது. இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு பிறகு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலத்தில் அங்கு கொரோனா வைரஸ் தொற்றினால், 115பேர் பாதிப்படைந்துள்ளதோடு, ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்படி, அங்கு மொத்தம் 18 ஆயிரத்து 280பேர் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் 706பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 959பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 10பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுதவிர, 16 ஆயிரத்து 615பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.