இந்தியாவில் பிராணவாயு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை

இந்தியாவில் பிராணவாயு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை

இந்தியாவிலுள்ள வைத்தியசாலைகளுக்கு தடையின்றி பிராணவாயு விநியோகத்தை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொவிட்-19 பரவல் வெகுவாக அதிகரித்துள்ளது.

டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் பிராணவாயு பற்றாக்குறை காரணமாக பலர் மரணித்தனர்.

இந்தநிலையில் பிராணவாயு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இந்தியா முழுவதும் 551 வைத்தியசாலைகளில் பிராணவாயு உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உற்பத்தி நிலையங்கள் விரைவில் செயற்பட ஆரம்பிக்கும் என இந்திய பிரதமரது ஊடகப்பிரிவை மேற்கோள் காட்டி அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன