
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இந்தியாவுக்கு விரைவில் பிராணவாயு உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள்
இந்தியாவுக்கு விரைவில் பிராணவாயு கொள்கலன்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசாங்கங்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்தநிலையில் பல்வேறு வெளிநாடுகளும் இந்தியாவுக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகள் இந்தியாவுக்கு முதல்கட்டமாக பிராணவாயு கொள்கலன்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது