வெள்ளத்தில் மூழ்கிய ஜப்பான்: நீரில் அள்ளுண்ட பொதுமக்கள்!

வெள்ளத்தில் மூழ்கிய ஜப்பான்: நீரில் அள்ளுண்ட பொதுமக்கள்!

ஜப்பானின் தென்மேற்குப் பகுதியான க்யுஷுவில் தொடர் மழை மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 44 பேர் பலியாகியுள்ளனர்.

இதுதொடர்பாக ஜப்பானின் வானிலை ஆராய்ச்சி மையமானது துறைமுக நகரான புயிகோகா, நாகசாகி மற்றும் சகா ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய நிலவரப்படி குமொமோட்டோ, மியாசாகி மற்றும் கிரோசிமா பகுதிகளில் 1,17,000 வீடுகளில் இருந்து 2,54,000 பேர் வெளியேறி பாதுகாப்பான இடத்தில தஞ்சமடைந்துள்ளனர்.

குமொமோட்டோ பகுதியில் மரணமடைந்த 44 பேரில் 12 பேரின் மரணமானது செஞ்சுன் மருத்துவமனையில் பதிவு செய்யபட்டுள்ளது.

அங்குள்ள குமா நதியின் கரையில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு உண்டான வெள்ளப்பெருக்கில் சிக்கியே அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 10 பேரைக் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.