விக்டோரியாவில் நான்கு வாரங்கள் முடக்கநிலையை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலணை!

விக்டோரியாவில் நான்கு வாரங்கள் முடக்கநிலையை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலணை!

விக்டோரியா மாநிலம் நான்கு வாரங்கள் முடக்கநிலையை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அவுஸ்ரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) மாநிலத்தில் 191 புதிய வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் விரைவில் இதுகுறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் அதிகரித்துள்ள விக்டோரியா, நாட்டின் பிற பகுதிகளிலிருந்து திறம்பட தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது.

இதன்படி, அண்டை மாநிலமான நியூ சவுத் வேல்ஸுடனான விக்டோரியாவின் எல்லை உள்ளூர் நேரப்படி நள்ளிரவில் மூடப்பட உள்ளது. இரு மாநிலங்களுக்கிடையில் சுமார் 50 எல்லைக் கடப்புகள் உள்ளன.

ஒரு நூற்றாண்டில் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் விக்டோரியா இடையேயான எல்லை மூடப்படுவது இதுவே முதல் முறை.