இங்கிலாந்து- மே.தீவுகள் டெஸ்ட்: மோசமான காலநிலை காரணமாக முதல்நாள் ஆட்டம் இடைநடுவே நிறுத்தம்

இங்கிலாந்து- மே.தீவுகள் டெஸ்ட்: மோசமான காலநிலை காரணமாக முதல்நாள் ஆட்டம் இடைநடுவே நிறுத்தம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டி, மோசமான காலநிலை காரணமாக இடைநடுவே இடைநிறுத்தப்பட்டது.

இதற்கமைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 1 விக்கெட் இழப்புக்கு 35 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், ரொறி பர்ன்ஸ் 20 ஓட்டங்களுடனும், ஜோ டென்லி 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

இதன்போது, மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், செனோன் கெப்ரியல் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவலால் தடைப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட், 117 நாட்களுக்கு பின்னர் மீண்டும் இத்தொடரின் ஊடாக நேற்று (புதன்கிழமை) புத்துயிர் பெற்றது.

இரசிகர்கள் இன்றி சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல், மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 17.4ஓவர்கள் நிறைவில் 35 ஓட்டங்களை பெற்றிருந்தபோது, மழைக் குறுக்கிட்டது. இதனால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

தற்போது இன்னமும் 9 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸின் இரண்டாவது நாள் ஆட்டத்தை இன்று தொடரவுள்ளது.