
நம்பிக்கையில்லா பிரேரணை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு
அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு உட்படுத்துவதற்கான தினம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஜூலை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.