முதலாம் உலகப்போர் ஆரம்பமான நாள்: 28-7-1914

முதலாம் உலகப்போர் ஆரம்பமான நாள்: 28-7-1914

ஆஸ்திரியா இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும் காரில் சென்றபோது செர்பியா நாட்டைச் சேர்ந்த காவ்ரீலோ பரின்சிப் என்பவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது 1914-ம் ஆண்டு ஜுன் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. இதன் காரணமாகப் பழிவாங்கும் நோக்குடன், செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. பின்னர் இதில் பல நாடுகள் இணைந்து உலகப்போராக மாறியது.

ஆஸ்திரியா இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும் காரில் சென்றபோது செர்பியா நாட்டைச் சேர்ந்த காவ்ரீலோ பரின்சிப் என்பவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது 1914-ம் ஆண்டு ஜுன் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது.

இதன் காரணமாகப் பழிவாங்கும் நோக்குடன், செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. பின்னர் இதில் பல நாடுகள் இணைந்து உலகப்போராக மாறியது.
இதே தேதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:-

* 1914 - முதலாம் உலகப் போர் ஆரம்பமானது. செர்பியா மீது ஆஸ்திரியா- ஹங்கேரி போர் தொடுத்தன.

* 1915 - ஐக்கிய அமெரிக்காவின் ஹெயிட்டி முற்றுகை ஆரம்பமானது.

* 1943 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகர் மீது பிரிட்டன் குண்டுத் தாக்குதல் நடத்தியதில் 42 ஆயிரம் ஜெர்மனியர்கள் கொல்லப்பட்டனர்.

* 1945 - அமெரிக்க போர் விமானம் ஒன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 79-ம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

* 1957 - ஜப்பானின் இசகாயா என்ற இடத்தில் மழை, மற்றும் மண்சரிவு காரணமாக 992 பேர் பலியானார்கள்.

* 1965 - வியட்நாம் போர்: தெற்கு வியட்நாமில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை 75 ஆயிரத்திலிருந்து 1 லட்சத்து 25 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்சன் அறிவித்தார்.