பண்ணை வீட்டில் பணியாற்றி வந்த பெண்ணை தொழிலதிபரும், அவரது நண்பரும் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

பண்ணை வீட்டில் பணியாற்றி வந்த பெண்ணை தொழிலதிபரும், அவரது நண்பரும் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் லால்கட்டி பகுதியை சார்ந்த தொழிலதிபர் ஷிவ் நாராயண் பாண்டே (வயது 60). இவர் அதே பகுதியில் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வரும் நிலையில், இவருக்கு அங்குள்ள ரத்திபாத் கிராமத்தில் பண்ணை வீடு உள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமையின் போது இரவு பண்ணை வீட்டிற்கு சென்ற நாராயண் பாண்டே, இரவு விருந்துக்கு தனது நண்பரான அரசுக்கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் தேவேந்திர பாண்டே (வயது 81) என்பவரை உடன் அழைத்து சென்றுள்ளார். 

அங்கு, சென்று மது அருந்திய இருவரும், பண்ணை வீட்டில் பணியாற்றி வந்த 38 வயது குடும்ப பெண்மணியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் நாராயண் நடத்தி வந்த செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். 

மேலும், பெண்ணும் அந்த பண்ணை வீட்டில் 21 வருடமாக பணியாற்றி வந்த நிலையில், இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. மேலும், முன்னதாகவே பாதிக்கப்பட்ட பெண்மணி நாராயண் குளித்துக்கொண்டு இருக்கும் போது வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. 

இதன்தொடர்ச்சியாக, தனது நண்பரான ஓய்வு பெற்ற பேராசிரியருடன் பண்ணை வீட்டிற்கு வந்து கூட்டுப்பாலியல் பலாத்கார கொடூரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஏற்கனவே குளியல் வீடியோவை காண்பித்து மிரட்டிய காமுகன் இன்று இப்படியான விபரீதத்தை அரங்கேற்றி விட்டானே என்று பெண்மணி மனத்துயரில் இருந்து வந்துள்ளார். 

பின்னர், இது தொடர்பான தகவலை தனது கணவருக்கு தெரியப்படுத்தி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், ஓய்வு பெற்ற பேராசிரியரான தேவேந்திர பாண்டே எழுத்தாளரும் ஆவார். இவர் சில புத்தகங்களை எழுதியுள்ள நிலையில், இந்த கொடூரத்தை அரங்கேற்றி இருக்கிறார்.