
திருமண ஆசைகாட்டி மேட்ரிமோனியின் மூலம் 50 பெண்களிடம் உல்லாசம்- மோசடி மன்னன் வசமாக சிக்கியது எப்படி?
மேட்ரிமோனியில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்து, செல்போனில் 50 பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோவை போலீசார் கைப்பற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் திருமணத்திற்காக மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்திருந்தார்.
அப்போது, பெங்களூரில் பணிபுரிந்து வருபவரின் மகன் பொறியியல் பட்டம் படித்த சூர்யா(25) என்ற இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக மேட்ரிமோனியில் பெண் தேடுவதாக கூறி தனியாக வந்து பெண் பார்த்து வீட்டில் பேசி பழகியுள்ளார். பெண் வீட்டாரிடம் தான் மத்திய மனித உரிமை ஆணையத்தில் விசாரணை அதிகாரியாக பணிபுரிந்து வருவதாகவும் தன்னுடைய பெற்றோர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் பெண் பார்க்க சென்றபோது கூறியுள்ளார்.
அதன்பின்னர் செல்போனில் பேசி பழகி நம்பக தன்மை ஏற்படுத்தும் சூர்யா ஒரு கட்டத்தில் தனியார் விடுதியில் அறை எடுத்து உல்லாசம் அனுபவித்து விட்டு அதனை வீடியோ தனது செல்போனில் பதிவும் செய்துள்ளார்.
மேலும், பெண் வீட்டாரிடம் நிலம் ஒன்று வாங்க வைத்திருந்த ரூபாய் 7 லட்சத்தை திட்டமிட்டு சூர்யா பரித்துள்ளான். அதன்பின்னர் இளம்பெண்ணை மட்டும் அழைத்து சென்று பெண்ணை ஏமாற்றி பணத்தை எடுத்து கொண்டு செல்போனை (Switch Off) அணைத்து விட்டு தலைமறைவாகி விட்டார்.
பின் பெண்வீட்டார் கொடுத்த புகாரின் படி தலைமறைவாகி இருந்த சூர்யாவை கைது செய்துள்ளனர். அவனிடம் நடத்திய விசாரணையில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.