ஆசிரியர் தொழிற்சங்கங்களை சந்தித்த அமைச்சரவை இணைக்குழு!

ஆசிரியர் தொழிற்சங்கங்களை சந்தித்த அமைச்சரவை இணைக்குழு!

ஆசிரியர்கள், அதிபர்கள் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கான தமது பரிந்துரைகளை எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் பரவல் காரணமாக ஆர்ப்பாட்டங்களை நடாத்த முடியாத சூழலில், டிஜிட்டல் எதிர்ப்புக்கள் சிலவற்றை முன்னெடுக்க ஆசிரியர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இணைய கற்பித்தலில் இருந்து விலகி ஆசிரியர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிபகிஸ்கரிப்பு இன்று 37 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இதேவேளை, ஆசிரியர், அதிபர்கள் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழுவின் உறுப்பினர்கள் ஆசிரியர், அதிபர்கள் சங்கங்களின் பிரதிநிதிக​ளை சந்தித்து நேற்றும் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கமைய, இன்றைய தினம் இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்களுடன் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.