
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,948 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 403 பேர் உயிரிழந்த நிலையில் 38,487 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 30,948 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 403 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 38,487 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 3,24,24,234 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,16,36,469 பேர் குணமடைந்துள்ளனர். 4,34,367 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது வரை 3,53,398 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 52,23,612 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 58,14,89,377 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.