காணித் தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை

காணித் தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை

யாழ். சித்தங்கேணி காணித் தகராறு காரணமாக 49 வயதான குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை செய்யயப்பட்டுள்ளார் என வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தனிமைப்படுத்தல் ஊரடங்கிற்கு மத்தியில் இன்று (25) அதிகாலை 04.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.