
சி.எஸ்.கே.- ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியில் ரூ. 50 லட்சம் அளவில் மிகப்பெரிய சூதாட்டம்: 10 பேர் கைது
சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்து சூதாட்டத்தில் நடைபெற்ற விவகாரத்தில் டெல்லி போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர்.
ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டி நடைபெற்று வரும்போது தங்களுக்கு பிடித்தமான அணி வெற்றிபெறும் என பந்தயம் கட்டுவது வழக்கம். ட்ரீம் லெவன் என்ற செயலி 11 பேரை தேர்வு செய்து விளையாடும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது. பணம் செலுத்தி இதில் கலந்து கொண்டு விளையாடலாம்.
சிலர் அணி வெற்றி பெறுவதில் இருந்து, இந்த பந்தில் அவர் ஆட்டமிழப்பார், இந்த பந்தில் அவர் சிக்ஸ் அடிப்பார் என பந்துக்கு பந்து பணம் கட்டி விளையாடுவார்கள். இப்படி நடத்துவதற்கு மிகப்பெரிய அளவில ஏஜெண்டுகள் உள்ளனர்.
அதிகாரப்பூர்வமற்ற வகையில் இவ்வாறு விளையாடுவது சூதாட்டம எனக் கருதப்படுகிறது. சட்டத்திற்கு எதிரானது என்பதால் போலீசார் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றன.
நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியின்போது டெல்லியில் மிகப்பெரிய சூதாட்டம் நடைபெற்றுள்ளது. டெல்லியில் இருந்து அடுத்த மாநிலங்களில் உள்ளவர்களையும் தொடர்பு கொண்டு சூதாட்டம் நடைபெற்றுள்ளது.
10 மடிக்கணினி, 38 செல்போன்கள், மூன்று எல்.இ.டி. டி.வி.-யை வைத்து இந்திய அளவில் சூதாட்டத்தை நடத்தியுள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சூதாட்டம் நடத்திய 10 பேரை கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்கள் பயன்டுத்திய எலக்ட்ரானிக் பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.