உ.பி.யில் லாரி- பயணிகள் பேருந்து நேருக்குநேர் மோதல்: 9 பேர் பரிதாப பலி

உ.பி.யில் லாரி- பயணிகள் பேருந்து நேருக்குநேர் மோதல்: 9 பேர் பரிதாப பலி

உத்தர பிரதேசத்தில் இன்று காலை பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும், லாரியும் நேருக்குநேர் மோதியதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

உத்தர பிரதேச மாநிலம் பராபங்கி கிசா பாத்தில் உள்ள பாபுர்ஹியா கிராமம் அருகே இன்று டெல்லியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்தும்- லாரியும் நேருக்குநேர் மோதியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கோர விபத்து

 

 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.