ஊழியருக்கு கொவிட் தொற்று: முல்லைத்தீவு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூடப்பட்டது!

ஊழியருக்கு கொவிட் தொற்று: முல்லைத்தீவு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூடப்பட்டது!

மறு அறிவித்தல் வரை முல்லைத்தீவு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அந்த அலுவலகத்தின் சேவையாளர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமையை அடுத்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த அலுவலகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.