யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்களில் தொடர்புடைய 6 பேர் அதிரடியாக கைது!

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்களில் தொடர்புடைய 6 பேர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் – அரசடி மற்றும் பழம் வீதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல்களில் தொடர்புடைய குற்றச்சாட்டில் 06 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசடி மற்றும் பழம் வீதியில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலால் வீடுகள் மற்றும் சொத்துகள் சேதமாக்கப்பட்டிருந்தன.

அதோடு தாக்குதலின்போது படுகாயமடைந்த பழம் வீதியைச் சேர்ந்த இளைஞரொருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இரு குழுக்களுக்கிடையே வாள்வெட்டுத் தாக்குதலின்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதவர்களால், அரசடி வீதியிலுள்ள வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் இரு தரப்பிலிருந்தும் ஆறு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடபில் மேலதிக விசாரணைகளை யாழ். குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.