
விபத்து நடந்த இடத்திற்கு சென்று கதறிய யாஷிகா: காப்பாற்றியவர்களுக்கு என்ன கொடுத்தார் தெரியுமா?
நடிகை யாஷிகா தான் விபத்தில் சிக்கிய இடத்திற்கு வந்து கதறியழுததுடன், தன்னைக் காப்பாற்றிய மக்களை சந்தித்து நன்றி கூறி இனிப்பு வழங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு படங்களில் நடித்து வந்த யாஷிகா, சில மாதங்களுக்கு முன்பு காரில் சென்ற போது விபத்துக்கு உள்ளாகியதுடன், அந்த விபத்தில் சம்பவ இடத்தில் அவரது தோழி உயிரிழந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட யாஷிகா, இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் பலத்த அடிபட்டு நடக்கமுடியாமல் அவதிப்பட்டார்.
இதனால் ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். அதன் பிறகு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த யாஷிகா சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
ஓரளவிற்கு உடல்நிலை தேறிய யாஷிகா கையில் ஸ்டிக்கின் உதவியுடன் மெதுவாக நடந்து பழகி வந்தார். இந்நிலையில் யாஷிகா பல மாதங்களுக்குப் பிறகு ஒரு கடை திறப்பு விழாவிற்கு கையில் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் வந்தார்.
யாஷிகாவின் இந்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இந்நிலையில் யாஷிகா பாண்டிச்சேரி சாலையில் தான் விபத்தில் சிக்கிய இடத்திற்கு வந்து கண்ணீர் விட்டு கதறியழுதுள்ளார்.
அதுமட்டுமின்றி அங்கு தன்னைக் காப்பாற்றிய மக்களை சந்தித்து நன்றி தெரிவித்ததோடு, அவர்களுக்கு இனிப்பு வழங்கிவிட்டு சென்றுள்ளார்.