கனவு நனவானது - ஆலியா பட்

கனவு நனவானது - ஆலியா பட்

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், தற்போது ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

கனவு நனவானது - ஆலியா பட்

ஆலியா பட்

‘பாகுபலி’ படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கி உள்ள பிரமாண்டமான படம், ‘ஆர் ஆர் ஆர்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து ஆலியா பட் கூறியதாவது:

 

“நான் என் திரையுலக பயணத்தை தமிழ் படத்தில்தான் ஆரம்பித்தேன். இப்போது இங்கு மீண்டும் வந்திருப்பதில், மகிழ்ச்சி. ராஜமவுலி இயக்கத்தில் நடித்ததில், ஒரு கனவு நனவானது போல் உணர்ந்தேன். ரசிகர்களுக்கு இந்த படம், மிகப்பெரிய சந்தோசத்தை தரும்.

 

ஆலியா பட்

 

பாலிவுட் படத்தில் மட்டுமே நடிப்பதை விரும்பவில்லை. தமிழ் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இந்த படத்தில் நடித்தபோது என்னை மிக நன்றாக கவனித்து கொண்டார்கள். அதை ஒரு இனிமையான அனுபவமாக எடுத்துக் கொண்டேன். படப்பிடிப்பின்போது ரசிகர்கள் என்னிடம் காட்டிய அன்பில் நெகிழ்ந்து போனேன்”.