பொய் கூறி அசிங்கப்பட்ட தாமரை... லீக்கான புகைப்படத்தால் அம்பலமான உண்மை! இது தேவையா?

பொய் கூறி அசிங்கப்பட்ட தாமரை... லீக்கான புகைப்படத்தால் அம்பலமான உண்மை! இது தேவையா?

பிக்பாஸ் நிகழ்ச்சி 76 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கிறது.

நேற்று முன் தினம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் Preethi டாஸ்க் கொண்டு கொடுக்கப்பட்டது.

இதில் எபிசோடில் புளு மற்றும் சிகப்பு ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையே சமையல் போட்டி வைக்கப்பட்டது.

இந்த சமையல் போட்டியில் புளூ டீம் வெற்றி பெற்றதாக நடுவர் குழு அறிவித்தது.

இதனால் வெற்றி பெற்ற புளூ டீம் அணியில் இருந்த தாமரை, அக்சரா, சிபி மற்றும் அபினய் ஆகியோர்களுக்கு கேஸ் ஸ்டவ் பரிசாக வழங்கப்படுவதாக பிக்பாஸ் அறிவித்தார்.   

இந்த அறிவிப்பை கேட்ட உடன் ப்ளூ டீமில் இருந்த மற்றவர்களை விட தாமரை தான் துள்ளி குதித்து இருந்தார். அதிலும் ‘எங்க வீட்டில் அடுப்பே இல்ல’ என்று மகிழ்ச்சி போங்க தாமரை கூறியது மற்றவர்களை நெகிழ செய்தது.

இப்படி ஒரு நிலையில் உண்மையில் தாமரையின் வீட்டில் கேஸ் அடுப்பு உள்ளது என்றும், அவர் பொய் சொல்கிறார் என அவரது புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.  

குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஒரு வேளை இது வேறு எங்கும் எடுக்கப்பட்ட புகைப்படமா என்றும் தெரிய வில்லை.