
விவாகரத்திற்கு பின் முதன் முறை சந்தித்த சமந்தா – நாக சைதன்யா! என்ன நடந்தது தெரியுமா? ஷாக்கில் ரசிகர்கள்
விவாகரத்தை அறிவித்து மூன்று மாதங்களுக்கு பிறகு சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
நாக சைதன்யா தற்போது பங்காருராஜு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஷுட்டிங் ராமாநாயுடு ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.
இந்த பக்கம் சமந்தாவும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் யசோதா படத்தின் ஷுட்டிங்கும் ராமாநாயுடு ஸ்டூடியோவில் தான் நடக்கிறது.
இந்த படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் கிறிஸ்துமஸ் அன்று நிறைவடைந்தது. ஷுட்டிங்கில் பங்கேற்க வந்த போது தான் சமந்தாவும், நாக சைதன்யாவும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர்.
விவாகரத்திற்கு பிறகு இப்போது தான் இருவரும் முதல் முறையாக சந்தித்துள்ளனர். ஆனால் சமந்தாவும், நாகசைதன்யாவும் ஏதும் பேசிக் கொள்ளவில்லையாம்.
ஷுட்டிங்கை முடித்து விட்டு அவரவர் கார்களில் ஏறி சென்று விட்டார்களாம். ஏதாவது பேசியிருந்தால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்திருப்பார்கள்.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசாமல் போனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.