ஈரான் துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து: ஏழு கப்பல்கள் சேதம்

ஈரான் துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து: ஏழு கப்பல்கள் சேதம்

ஈரானின் தென்மேற்கு துறைமுகமான புஷரில் உள்ள கப்பல் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் ஏழு கப்பல்கள் சேதமடைந்தன.

புகை மண்டலமாக காட்சியளிக்கும் கப்பல் தளம்

ஈரானின் தென்மேற்கு பகுதியில் புஷர் துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு பிரமாண்டமான கப்பல் கட்டும் தளம் உள்ளது. இந்த தளத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஏழு கப்பல்கள் சேதடைந்தன. பயங்கர தீ விபத்தால் அந்த பகுதி கரும்புகையாக காட்சியளித்தன.

 

ஈரானில் கடந்த ஒரு மாதமாக முக்கியமான இடங்களில் குண்டு வெடிப்பு அல்லது தீ விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன. ராணுவம், அணுசக்தி நிலையம், தொழில்துறை இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

 

இது இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகளில் சைபர் நாசவேலை என்று ஈரானின் அதிகாரிகள் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி, ஈரானில் நடக்கும் மர்மமான ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னால் நாங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்திருந்தார்.

 

 

ஜூலை 2-ந்தேதி அணுசக்தி நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஜூன் 30-ந்தேதி மெடிக்கல் கிளினிக்கில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். ஜூலை 26-ந்தேதி பார்சின் ராணுவம் மற்றும் ஆயுதம் தயாரிக்கும் தளத்தில் விபத்து ஏற்பட்டது.