ராஜுவின் வெற்றியைக் கூட காண வராதது ஏன்? அண்ணாச்சியின் பரபரப்பான விளக்கம்

ராஜுவின் வெற்றியைக் கூட காண வராதது ஏன்? அண்ணாச்சியின் பரபரப்பான விளக்கம்

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக ராஜு அறிவிக்கப்பட்டு ஒட்டுமொத்த மக்களையும் கொள்ளை கொண்டுள்ளார்.

ராஜு இந்த நிகழ்ச்சியின் போது பிக்பாஸ் வீட்டிற்குள் அண்ணாச்சியுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். ஆனால் கிராண்ட் ஃபினாலேவிற்கு அண்ணாச்சி வராமல் இருந்தது பெரும் கேள்வியினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிக்பாஸ் வீட்டிற்கள் இருக்கும் போதே அண்ணாச்சி ராஜு மீது அளவுகடந்த பாசத்தினை வைத்ததுடன், ராஜுவிற்கு ஆதரவாகவும் இருந்து வந்தார்.

 

இந்நிலையில் சமூகவலைத்தங்களில் அண்ணாச்சி பிக்பாஸ் ஃபைனலில் கலந்து கொள்ளாதது ஏன்? என்ற கேள்வி பயங்கர சர்ச்சையினை கிளப்பி வருகின்றது.

இது குறித்து இமான் அண்ணாச்சி கூறுகையில், பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு எனக்கு தொடர்ந்து பட சூட்டிங், டப்பிங் போன்ற வேலைகள் இருந்து வருவதால், பொங்கல் பண்டிகைக்கு கூட வீட்டிற்கு செல்ல முடியவில்லை.

மேலும் பிக்பாஸில் பைனல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்றால், ஏழு நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். டப்பிங் வேலை அதிகமாக இருந்ததால், தனியாக நேரம் ஒதுக்கமுடியாததால் கலந்து கொள்ள முடியவில்லை.

மேலும், ராஜூ தான் டைட்டில் வெற்றிபெறுவார் என்று பலரும் கூறியதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன், ஒரு காமெடியன் இந்த நிகழ்ச்சியில் டைட்டிலை ஜெயிக்கணும் என்று தான் ராஜு பிக்பாஸ் வீட்டில் சொல்லியிருந்தார் என்றும் கூறியிருந்ததாக அண்ணாச்சி கூறியுள்ளார்.