மீனவரை காணவில்லை!

மீனவரை காணவில்லை!

காலி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ”மதுஷன் புத்தா” என்ற மீன்பிடிப்படகில் கடலுக்குச் சென்ற மீனவரொருவர், கடலில் விழுந்து காணாமல் போயுள்ளார்.

நேற்று முன்தினம் (09) குறித்த படகு, கப்பலொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடலில் விழுந்த மீனவர்களில் 4 பேர் கப்பலில் இருந்த மீட்புக்குழுவினரால் காப்பாற்றப்பட்டுள்னர்.

எனினும், அவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

அஹங்கம - குருல்லவல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய மீனவரொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த 7ஆம் திகதி குறித்த மீன்பிடிப்படகு கடலுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.