
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 67 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 39 லட்சத்து 30 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
கோப்பு படம்
ஜெனீவா:
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 39 லட்சத்து 30 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 39 லட்சத்து 30 ஆயிரத்து 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 41 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 67 ஆயிரத்து 389 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 50 லட்சத்து 72 ஆயிரத்து 707 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்து 902 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிப்பில் இருந்து 82 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர்
உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - 36,89,026
பிரேசில் - 20,14,738
இந்தியா - 9,68,876
ரஷியா - 7,52,797
பெரு - 3,41,586
தென் ஆப்பிரிக்கா - 3,24,221
சிலி - 3,23,698
மெக்சிகோ - 3,17,635
ஸ்பெயின் - 3,05,935
இங்கிலாந்து - 2,92,552
ஈரான் - 2,67,061
பாகிஸ்தான் - 2,57,914
இத்தாலி - 2,43,736
சவுதி அரேபியா - 2,43,736
துருக்கி - 2,16,873
ஜெர்மனி - 2,01,836