கல்வி அமைச்சர் பொது மக்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதுடன், பரீட்சை எவ்வித தடையுமின்றி நடைபெறுவதற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஆதரவை வழங்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கேட்டுக்கொண்டுள்ளார்.
பரீட்சையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.