குஜராத்தில் விஷ சாராய உயிரிழப்பு 40 ஆக உயர்வு

குஜராத்தில் விஷ சாராய உயிரிழப்பு 40 ஆக உயர்வு

குஜராத்தின் போடாட் மாவட்டத்தில் ரோஜிட் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கள்ளச் சாராயம் குடித்த பலருக்கு மறுநாள் அதிகாலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மேலும் 7 பேர் இறந்ததால் விஷ சாராய உயிரிழப்பு 40 ஆக உயர்ந்தது.

இதுதவிர சுமார் 50 பேர் போடாட், அகமதாபாத் மற்றும்பாவ்நகரில் உள்ள மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களில் 31 பேர் போடாட் மாவட்டத்தையும் எஞ்சிய 9 பேர் அகமதாபாத் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர்.