கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட யுவதிகள் மீட்பு!

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட யுவதிகள் மீட்பு!

நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்ற போது கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு யுவதிகள் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு மற்றும் கடற்படையின் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டனர்.

இச்சம்பவம் இன்று (12) இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தாரோடு சுற்றுலா வந்த அனுராதபுரம் சியம்பலகஹாகம பிரதேசத்தைச் சேர்ந்த இந்த யுவதிகளே கடலில் நீராடும் போது அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சுமார் 150 மீற்றர் தூரம் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இவர்கள் இருவரையும் பொலிசாரும் கடற்படையின் கரையோரப் பாதுகாப்பு பிரிவினரும் கரைக்குக் கொண்டு வந்து முதலுதவி அளித்து குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைத்துள்ளதாக கரையோர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.