கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான அறிவிப்பு

கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான அறிவிப்பு

நாட்டில் மேலும் 161 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 668,497 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தினார்.

அவர்களில் 30 முதல் 59 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவரும் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 4 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது