உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள்!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள்!

2023ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 

இந்த விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.
 

குறித்த அஞ்சல் விண்ணப்ப கையளிப்புக்கான திகதி நீடிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 

அதேநேரம் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 

எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணங்களை செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
 

340 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் நேற்று தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களால் வெளியிடப்பட்டது.