
தொடரூந்து பெட்டிகள் மூலமான சரக்கு கொண்டுசெல்லல் கட்டணம் அறிவிப்பு
தொடரூந்து பெட்டிகளை பயன்படுத்தி பொருட்களை கொண்டு செல்வதற்காக அறவிடப்படும் கட்டணத்தை தொடரூந்து திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
தமது சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கு தொடரூந்துகளை பயன்படுத்தும் எவரும் கொழும்பில் உள்ள பிரதான களஞ்சியசாலையில் இருந்து நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு தொடரூந்து நிலையத்துக்கும் பொருட்களை எடுத்துச் செல்லமுடியும்.
அதன்படி, ஒரு டன் எடையுள்ள சரக்குகளை கொண்டு செல்ல, ஒரு கிலோமீட்டருக்கு 11 ரூபா கட்டணமாக அறவிடப்படும்.
அத்துடன், ஒரு தொடரூந்து பெட்டியை வாடகைக்கு பெறுவதற்கு 20,000 ரூபாவினை திரும்பப்பெறக்கூடிய கட்டணமாக வசூலிக்கிறது.
ஒரு தொடரூந்து பெட்டியில் குறைந்தபட்சமாக 35 டன் எடையையும், அதிகபட்சம் 45 டன் எடையையும் ஏற்றுச்செல்லமுடியும். அத்துடன், சரக்குகளை கொண்டுசெல்லக்கூடிய குறைந்தபட்ச தூரம் 100 கிலோமீற்றரென தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.